
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கொழும்பில் நடந்த போராட்டம்
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் முக்கிய தொழிற்துறைகளுக்கு மானியம் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தது.
தொழிற்சங்கத் தலைவர் வேலாயுதம்
'மண்ணெண்ணெய் மானியம் கண்துடைப்பு': வேலாயுதம்
200 ரூபாய் மண்ணெண்ணெய் மானியம் மலையக மக்களுக்கு பயனளிக்காது என்கிறார் தொழிற்சங்கத் தலைவர் கே. வேலாயுதம்
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
பஸ் போக்குவரத்துத் துறையினருக்கும் மீனவர்களுக்கும் எரிபொருள் மானியங்களை வழங்குவதாக அறிவித்த அரசாங்கம், சுமார் ஐந்து லட்சம் கிராமப்புற குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய்க்கான மானியம் வழங்கவுள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
ஆனால் அதிகரித்த எரிபொருள் விலைகளிடன் ஒப்பிடும்போது இந்த மானியங்கள் தமக்கு ஒருவகையிலும் உதவப்போவதில்லை என்று தொழிற்சங்கங்கள் விமர்சிக்கின்றன.
துணையமைச்சர் முத்து சிவலிங்கம்
'மண்ணெண்ணெய் ஒரு பிரச்சனையல்ல': அமைச்சர் முத்து சிவலிங்கம்
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு மலையக மக்களை பாதிக்காது என்கிறார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சர் முத்துசிவலிங்கம்
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாதாந்தம் 200 ரூபாய்

'மின்சார வசதியற்ற பல குடியிருப்புகள் மலையகத்தில் இன்னும் உள்ளன'
ஐந்து லட்சம் கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்ற மண்ணெண்ணெய் மானியம் மலையக பெருந்தோட்டத்துறை மக்களை எந்தளவுக்கு சென்றடையப் போகின்றது என்பது கேள்விக்குறியென்று தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கே. வேலாயுதம் தமிழோசையிடம் கூறினார்.
மின்சார வசதியற்ற குடும்பங்களுக்கு மட்டும் மாதத்திற்கு வழங்கப்படுகின்ற 200 ரூபாய் மானியம் இரண்டு லீட்டர் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு கூட போதுமானதல்ல என்றும் வேலாயுதம் தெரிவித்தார்.
மலையகத்தில் மின்சார வசதியற்ற, மண்ணெண்ணெய் விளக்கை நம்பியிருக்கின்ற குடும்பங்களுக்கும் சமையல் தேவைகளுக்காக மண்ணெண்ணெய் அடுப்பை நம்பியிருக்கின்ற குடும்பங்களுக்கும் 200 ரூபா மானியம் உதவாது என்றும் அவர் கூறினார்.
ஆனால், அரசில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த, பொருளாதாரத்துறை துணை அமைச்சர் முத்து சிவலிங்கம் இந்தக் குற்றச்சாட்டுக்களை தமிழோசையிடம் மறுத்தார்.
மலையகத்தில் மண்ணெண்ணெய்க்கான தேவை மிகக்குறைவாகவே இருப்பதாகவும் துணை அமைச்சர் கூறினார்.
இலங்கையில் மண்ணெண்ணெய் விலை 35 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளமை மலையக பெருந்தோட்டப் புற மக்களை கடுமையாகப் பாதிக்கும் என்று கூறிய சில தொழிற்சங்கங்கள் அண்மையில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.








