
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் காணாமல் போன லலித்குமார் மற்றும் அவரது சகா ஆகியோரைக் கண்டு பிடித்துத் தரவேண்டும் எனக்கோரி, ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார தலைமையில் இந்த இளைஞர்களின் உறவினர்கள் இன்று யாழ் பேரூந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
இவர்களுடன் ஏனைய காணாமல் போனவர்களின் உறவினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமைதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அங்கு வருகை தந்த யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவ, காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பதற்குத் தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
காணாமல் போனவர்களின் உறவினர்களின் சார்பில் முன்னர் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடுகளை செய்த வேளையில் ஜேவிபி அதிருப்தியாளர் குழுவின் ஆதரவாளர்களான இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தில் காணாமல் போயிருந்தனர்.
பின்னர் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.








