bbc.co.uk navigation

அநுராதபுரம் தமிழ் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 நவம்பர், 2011 - 15:46 ஜிஎம்டி

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் தாம் ஞாயிறன்று சிறைக்காவலர்களால் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், இனிமேல் இப்படியான நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு கோரியும் அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், ஞாயிறன்று கைதிகளை பாதுகாவலர்கள் வழமையான சோதனைகளைச் செய்ய முயன்றபோது அவர்களிடம் இருந்து 19 கைத்தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறும், சிறைச்சாலைகள் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகரான சிவலிங்கம் சதீஷ்குமார், அந்த நடவடிக்கையின் போதே அங்கு அமைதியீனம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை செய்வதற்காக ஒரு அதிகாரிகள் குழுவை தமது அமைச்சு அங்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.