|
செய்தியறிக்கை
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆப்கானிஸ்தானில் அல்கைதாவினர் தற்போது செயற்படவில்லை - பிரிட்டிஷ் ஆயுதப்படைகளின் தலைவர் ஆப்கானிஸ்தானில் அல்கைதாவினர் தற்போது செயல்படவில்லை என்றும், அல்கைதாவினரின் நடமாட்டம் பாகிஸ்தானில் ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளது என்றும் பிரிட்டிஷ் ஆயுதப் படைகளின் தலைவர் சர் ஜாக் ஸ்டிர்ரப் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கை அல்கைதாவுக்கெதிரான பரவலான மோதலுக்கு உதவியாகவே இருக்கிறது என சர் ஜாக் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நேட்டோ கூட்டணியின் படையினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கை முன்னேற்றம் காண வேண்டும் என்றாலோ வெற்றியடைய வேண்டும்
என்றாலோ ஆப்கானிஸ்தான் தொடர்பான தனது வியூகம் என்ன என்பதை அமெரிக்கா தீர்மானிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர்
பாப் எய்ன்ஸ்வொர்த் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 12 பேர் பலி
பாகிஸ்தானில் வட மேற்கு பிராந்தியத்தில் பெஷாவர் நகருக்கு அருகில் மந்தைகள் விற்கும் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பழங்குடியின தலைவர் ஒருவர் உட்பட குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். உள்ளூரில் தாலிபன்களுக்கு எதிரான ஆயுதக்குழுவொன்றை உருவாக்கிய அப்துல் மாலிக் என்ற பழங்குடியின தலைவரை இலக்கு வைத்தே இந்த தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதலை தாமே நடத்தியதாக தாலிபனும் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் அண்மைய வாரங்களில் வரிசையாக நடைபெற்றுவந்துள்ள தாக்குதல் சம்பவங்களில் முந்நூறுக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது யேமனிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய இடங்களை சிலவற்றை மீட்டுள்ளோம் - சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில் யேமனுடனான எல்லைப் பகுதியில் சென்றவாரம் ஊடுருவியிருந்த யெமேனிய கிளர்ச்சிக்காரர்கள் அப்பகுதியில் கைப்பற்றிருந்த சில பகுதிகளை அவர்களிடம் இருந்து மீட்டெடுத்துவிட்டதாக சவுதி அரேபிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் இதை மறுத்துள்ளனர். வட யேமனிலுள்ள இலக்குகள் மீது சவுதி விமானங்கள் தொடர்ந்தும் குண்டுவீசிவருவதாக அவர்கள் கூறுகின்றனர். கிளர்ச்சிக்காரர்கள் ஊடுருவியபோது சவுதி அரேபிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து ஒரு வாரத்துக்கு முன்பு தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்திருந்ததாகவும், தங்களது நிலப்பரப்புக்குள்ளேயே தாக்குதல் நடத்தியதாகவும் சவுதியரேபியா கூறுகிறது. சவுதி படையினர் சிலரை சிறைபிடித்துள்ளதாக கிளர்ச்சிக்காரர்கள் கூறுவதையும் சவுதி அதிகாரிகள் மறுக்கின்றனர். ஆனால் சவுதி படையினர் மூன்று பேர் இறந்துள்ளனர் என்றும் நான்கு பேரைக் காணவில்லை என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மீள் இணக்கப்பாட்டை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் - ஆஸ்திரேலிய அரசு
இலங்கையில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் சமாதானத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கு வாய்ப்பாக அரசியல் சீர்திருத்தங்களையும் மீள் இணக்கப்பாட்டையும் முன்னெடுக்க அரசு முன்வரவேண்டுமென ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது. திங்கட்கிழமை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்திற்கு முன்பதாக கருத்துதெரிவித்த ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், இலங்கையிலிருந்து ஆட்கள் கடத்தப்படுவதை கையாளும் வழிகள் குறித்தும் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தஞ்சம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் கடந்த மாதம் முதல் இந்தோனேசியாவுக்கு அருகில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை ஏற்றுக் கொள்ள ஆஸ்திரேலியா மறுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||