BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 நவம்பர், 2009 - பிரசுர நேரம் 13:52 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
செய்தியறிக்கை
 

கோபன்ஹேகன் மாநாட்டில் ஒபாமா பங்கேற்பு

கோபன்ஹேகன் மாநாட்டில் ஒபாமா பங்கேற்பு
கோபன்ஹேகன் மாநட்டில் ஒபாமா பங்கேற்பு
அமெரிக்க அதிபர் ஒபாமா டிசம்பர் 9ம் தேதி கோபன்ஹேகனில் நடக்கவிருக்கும் பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா மன்ற மாநாட்டுக்கு செல்வார் என்று வாஷிங்டனில் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த உச்சி மாநாடு எந்த ஒரு சாராம்சமான உடன்பாட்டையும் உருவாக்கும் என்பது குறித்து அவநம்பிக்கை அதிகரித்து வரும் நிலைக்குப் பின்னர் இந்த முடிவு வருகிறது.

இந்த கோபன்ஹேகன் மாநாடு சட்டபூர்வமான ஒரு ஒப்பந்தத்துக்கு இட்டுச்செல்லும் வகையில் ஒரு வலுவான செயல்படுத்தக்கூடிய ஒரு உடன்பாட்டை எட்டவேண்டும் என்று ஒபாமா குறிப்பிட்டார்.


காலநிலை மாற்றத்தை சமாளிக்க வாக்களித்த நிதியை செல்வந்த நாடுகள் அளிக்கவில்லை:பிபிசியின் புலனாய்வு

குளிர்காலத்தில் சூரியன்
குளிர்காலத்தில் சூரியன்
பருவநிலை மாற்றத்தின் விளைவை வளர்முக நாடுகள் சமாளிக்க உதவ, செல்வந்த நாடுகள் தருவதாக உறுதியளித்த பல நூறு மிலியன் டாலர்கள் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கணக்கிலேயே வரவில்லை என்று பிபிசி கண்டறிந்துள்ளது.

2001ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 20 தொழில்வளமிக்க நாடுகள் ஒவ்வோரு ஆண்டும் 400 மிலியன் டாலர்களுக்கும் மேல் தருவதாக உறுதியளித்தன.

ஆனால் எட்டு ஆண்டுகளில் இதற்காக உருவாக்கப்பட்ட, இரண்டு ஐ.நா மன்ற நிதிகளில் 260 மிலியன் டாலர்கள் மட்டுமே செலுத்தப்பட்டிருப்பதாக பிபிசி புலனாய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ஐரோப்பிய ஒன்றியம் கொடுத்த உறுதிமொழிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்றார். ஆனால் கொடுத்த பணத்தை கணக்கிடுவதில் தவறுகள் நடந்திருக்கலாம் என்று அவர் ஒப்புக்கொண்டார். எதிர்காலத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் இருக்கின்றன என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.


இந்தியா பாலைவனமாகி வருவதாக ஆய்வு கூறுகிறது

மேய்ச்சலால் இந்தியா பாலைவனமாகிறது?
கூடுதல் மேய்ச்சலால் இந்தியா பாலைவனமாகிறது
இந்தியாவின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதி, பாலைவனமாகிவருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

காடுகள் அழிக்கப்படுவதும், ஆடுமாடுகள் அதிக அளவு மேய்ச்சல் செய்வதும் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சனையில் வட இந்தியாவும் மேற்கு இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை பெய்வதில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இந்தப் பிரச்சினை அதிகரிப்பதாகவும் கரன்ட் சயின்ஸ் என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கம், சுற்றுச்சூழல் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.


மேற்குக் கரையில் புதிய குடியேற்றங்கள் கட்டுவது இடை நிறுத்தம்

மேற்குக்கரைப் பகுதியில் புதிய கட்டிடங்கள்
மேற்குக்கரைப் பகுதியில் கட்டப்படும் புதிய வீடுகள்
இஸ்ரேலிய பிரதமர் பென்யமின் நெடன்யாகு மேற்குக் கரையில் புதிய குடியேற்றங்கள் கட்டப்படுவதை 10 மாதங்கள் நிறுத்திவைக்க ஒரு திட்டத்தை பிரேரிக்க உள்ளார்.

ஆனால் கிழக்கு ஜெருசெலேத்தில் இந்த குடியேற்றங்கள் நிறுத்தப்படமாட்டாது.

பாலத்தீன நிர்வாகத்துடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு உத்வேகத்தைத் தர இந்த திட்டத்துக்கு தனது அமைச்சரவையிடமிருந்து ஒப்புதலைப் பெற நெடன்யாகு கோருவார் என்று அவரது அலுவலகம் கூறியது.

ஆனால், கிழக்கு ஜெரூசலேத்தில் உள்ள குடியேற்றங்களை உள்ளடக்காத , எந்த ஒரு இஸ்ரேலிய குடியேற்ற இடைநிறுத்த திட்டமும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று பாலத்தீனர்கள் ஏற்கனவே தெளிவாக்கிவிட்டார்கள்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள