|
செய்தியறிக்கை
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உக்ரைன் தேர்தல் நியாயமாக நடைபெற்றது-சர்வதேச கண்காணிப்பாளர்கள் உக்ரைன் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில், ஜனாயகம் சிறப்பாக புலனாகியது என்று அனைத்துலக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை மதித்து, அதிகாரத்தை முறைப்படி கையளிக்க உக்ரைனியத் தலைவர்கள் தயாராக வேண்டும் என்று ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவுக்கான அமைப்பு கேட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவரான ஜோஸ் சோயரஸ் கருத்து வெளியிடும் போது உக்ரையினின் தேர்தல் ஆணையம் ஒளிவு மறைவின்றி பாரபட்சமற்ற முறையில் செயற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். தற்போதைய எதிர்கட்சித் தலைவரான விக்டர் யானுகோவிட்ச் மிகச்சிறு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்து கொண்டிருக்கிறார் என்று உக்ரையின்
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரான் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்காவும் பிரான்சும் கோரிக்கை
இரான் தனது அணுசக்தி திட்டத்தை துரிதப்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு எதிராக புதிய அனைத்துலக ஏற்றுமதி தடைகளை கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்று அமெரிக்காவும் பிரான்சும் தெரிவித்துள்ளன. மேற்குலக நாடுகளின் இந்தக் கருத்தை இரான் நிராகரித்துள்ளது. இந்தப் பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்க்க அனைத்துலக நாடுகள் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும் என்று பாரிஸ் நகரில் கருத்து வெளியிட்ட அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார். இரானின் நடவடிக்கைகள் மிரட்டும் வகையில் உள்ளது என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். யுரேனியச் செறிவூட்டலை மேலும்
மேம்படுத்த தாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்காக அடுத்த ஆண்டு மேலும் பல ஆலைகளை நிறுவ தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும்
இரான் அறிவித்துள்ளது கடும் பனிப் புயலில் 17 இந்திய இராணுவத்தினர் பலி
இந்திய நிர்வாகத்திலுள்ள காஷ்மீர் பகுதியின் உயர்ந்த மலைப் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி முகாம் ஒன்று பனிப்புயல் மற்றும் பனிப்பாறைகளின் சரிவு ஆகியவற்றால் தாக்கப்பட்டதில் 17 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளத்தாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. இதில் காயமடைந்த அனைவரும் ஆபத்தான நிலையை கடந்து விட்டதாகவும் இந்திய இராணுவம் அறிவித்துள்ளது. ஸ்ரீநகரின் வடமேற்கே மலையுச்சியில் இருக்கும் இந்த போர் நுணுக்க பயிற்சிக் கல்லூரி பனிப்புயலின் காரணமாக முற்றாக மூடப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் தொடர்ந்து பனிப் புயலும் கடும் சூறாவளிக் காற்று வீசி வருவதாலும், மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளன. தகவல் தொடர்புகளும்
சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு ஆதரவாக மக்கள் இயக்கம்
ஆஸ்திரேலியாவில் அண்மைக்காலமாக இந்தியர்கள் மீது நடத்தப்பட்டுவரும் வன்முறைத் தாக்குதல்கள் பற்றி மக்கள் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள கண்டன இயக்கம் ஒன்று பெருமளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வன்செயலுக்கு எதிரான இயக்கம் என்று பெயர் கொண்ட இந்த இயக்கம், ஆஸ்திரேலியாவில் வந்து குடியேறிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய உணவகங்களில் ஆஸ்திரேலிய மக்கள் சென்று உணவருந்துவதை ஊக்குவிப்பது இந்த அமைப்பின் நோக்கமக உள்ளது. மெல்பர்ண் நகரில் ஒரு சாதாரண கணினி இணைய பக்கமாக ஆரம்பித்து ஆதரவு அளிக்க விரும்புவோர் கைச்சாத்திடுங்கள் என்று கேட்டு, கணினி வலையத்தில், சமூக நட்பு இணைய தளங்கள் மூலம் இந்த இயக்கம் வேகமாக பரவியுள்ளது. இந்தியாவிலிருந்து செல்லும் மக்கள் மீது, குறிப்பாக மாணவர்கள் மீது சிட்ணி, மெல்பர்ண் நகரங்களில் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு கசப்புணர்வு தோன்றியுள்ளது.
சீக்கியர்கள் உடைவாள் அணிந்திருக்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதி கூறுகிறர்
சீக்கியர்கள் மதரீதியாக அணியும் கிர்பான் எனும் உடைவாளை பிரிட்டனில் வாழும் சீக்கியர்கள் பள்ளிக்கூடங்களுக்கும், இதர பொது இடங்களுக்கும் அணிந்து செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என, பிரிட்டனின் முதலாவது சீக்கிய நீதிபதியான சர் மோட்டா சிங் கேட்டுள்ளார். பள்ளிக்கூடங்களில் அதை தடை செய்வது தவறு என்று அவர் குறிப்பாக பள்ளிகள் மீது கண்டனம் தெரிவித்துள்ளார். சீக்கிய மத சிறுவர்கள், தீட்சை பெற்ற சீக்கியர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஐந்து கோட்பாடுகளில் கிர்பான் அணிவதும் ஒன்று. பிரிட்டனில் உடைவாள் அணிந்த சீக்கியர்கள் பொது இடங்களுக்கு நுழைவது தடைசெய்யப்பட்ட சம்பவங்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||