|
செய்தியறிக்கை
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அமெரிக்க சிப்பாய் ஒளிநாடாவில் ஆப்கானிஸ்தானில் கடந்த மாதத்தின் இறுதியில் தாலிபான்களால் பிடிக்கப்பட்ட ஒரு அமெரிக்க சிப்பாய் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஒளிநாடாவில் காட்டப்பட்டிருப்பது குறித்து அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த ஒளிநாடா சர்வதேச சட்டங்களை மீறிய ஒரு செயல் என்று அமெரிக்க இராணுவத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாலிபான்களால் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஒளிநாடாவில், தலை மழிக்கப்பட்டுள்ள அந்த அமெரிக்கச் சிப்பாய் தான் மிகவும் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கத் துருப்புக்கள் உற்சாகம் இழந்து காணப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதே ஒளிநாடாவில், அந்த அமெரிக்கச் சிப்பாயின் அடையாள அட்டையை அவரை கடத்திய ஆட்களில் ஒருவர் கையில் ஏந்தியிருப்பதும் காட்டப்பட்டுள்ளது. தாலிபான்களால் வெளியிடப்பட்டுள்ள அந்த ஒளிநாடாவில் காணப்படுபவர், பென் பெர்க்டால் எனப்படும் 23 வயதான தமது இராணுவச் சிப்பாய்தான்
என்பதை அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பெண்டகனும் உறுதி செய்துள்ளது. இராக் பாதுகாப்பில் கருத்து வேறுபாடுகள்
இராக்கிய நிர்வாகத்திடம் அந்த நாட்டின் நகரங்களின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்ட பிறகு, இராக்கிய அதிகாரிகளும் அமெரிக்க இராணுவம் எப்படி இணைந்து செயற்படுவது என்பது தொடர்பில் கருத்து வேற்றுமைகள் எழுந்துள்ளன. கடந்த ஜூன் மாதத்தின் இறுதியில் அமெரிக்கத் துருப்புக்கள் அங்கிருந்து விலகிய பிறகு எந்த விதமான கூட்டு ரோந்துப் பணிகளும் இடம் பெறவில்லை என்று இராக்கிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இராக்கில் புதிய சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்துமானால், அங்கு இருக்கக் கூடிய தமது படையினரின் உயிருக்கு ஆபத்துக்கள் ஏற்படலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கருத்து வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் வீழ்ந்தது
தெற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ தளம் அருகே சிவிலியன் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துகுள்ளானதில் குறைந்தப்பட்சம் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். கந்தஹார் மாகாணத்தில் உள்ள பிரதான தளத்தில் இருந்து இந்த ஹெலிகாப்டர் புறப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் இராணுவத்தினர் ஒருவரும் பாதிக்கப்படவில்லை என நேட்டோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே, குனார் பிராந்தியத்தில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறங்கியுள்ளது. கடந்த வாரம் தான் தலிபான் தீவிரவாதிகள் தெற்கு ஆப்கானிஸ்தானில் ஒரு சிவிலியன் ஹெலிகாப்டரை வீழ்த்தினர். இந்த சம்பவத்தில் ஆறு உக்ரைன் பொதுமக்களும் ஒரு ஆப்கான் குழந்தையும் கொல்லப்பட்டனர்.
எங்கு வேண்டுமானாலும் வீடு கட்டுவோம் - இஸ்ரேல்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கிழக்கு ஜெருசேலத்தில் யூதர்களுக்கு மேலும் வீடுகள் கட்ட கூடாது என்று ஐ.நா திட்டமிடுவதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நிராகரித்துள்ளார். தனது அமைச்சர்களிடம் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர், யூதர்கள் ஜெருசேலத்தில் எங்கு விரும்பினாலும் வீடு கட்டலாம் என கூறியுள்ளார். கடந்த வாரம் வாஷிங்டனில் இஸ்ரேல் தூதர்களை சந்தித்த அமெரிக்க அதிகாரிகள், கிழக்கு ஜெருசேலத்தில் கட்டிடம் கட்டும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கூறியதாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகின்றனர். இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கள் அமைதி நடவடிக்கை குந்தகத்தை ஏற்படுத்துவது போல இருப்பதாக மூத்த பாலஸ்தீன அணுசரனை பிரதிநிதி சயீப் எர்காத் கூறினார். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||