இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அப்துல் கலாம் அவர்கள் தெரிவித்த யோசனை மாற்று கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
இந்திய இலங்கை கடற்பரப்பில் இருநாட்டு மீனவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினைகள் தொடரும் நிலையில், கொழும்புக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்வைத்துள்ள யோசனைகள் இருதரப்பிலும் மாற்றுக் கருத்துக்களை தோற்றுவித்துள்ளது.
அப்துல் கலாம் அவர்களின் யோசனை தமது மீனவர்களுக்கு ஏற்புடையது அல்ல என்றும் நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தாது என்றும் இலங்கையின் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜேசுதாசன் கூறுகிறார்.
ஆனால் இந்த யோசனை வரவேற்கத்தக்கது என்றும், இது ஆக்கபூர்வமான யோசனை என்றும் கூறுகிறார் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தேவதாஸ்.
இருதரப்பு கருத்துக்களையும் இங்கே கேட்கலாம்.
BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது
(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.