BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்:
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
இந்திரா மறைந்து 25 ஆண்டுகள்
 
இந்திரா காந்தி
இந்திரா காந்தி

இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் ஒரே மகளான இந்திரா காந்தி 1966 இல் இருந்து 1977 வரையிலும் பின்னர் 1980 இல் இருந்து 1984 வரையிலும் இந்தியாவின் பிரதமர் பதிவியை வகித்தவர்.

இந்தியாவின் சர்ச்சைக்குரிய, அதே நேரத்தில் மிகவும் சக்தி படைத்த தலைவரான இந்திரா காந்தியின் 25 வது நினைவு நாளில் அவருக்கு பல்வேறு தரப்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தனது மகன்களுடன் இந்திரா
தனது மகன்களுடன் இந்திரா
1971 இல் வங்கதேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கிய போது இந்திரா காந்தியின் புகழ் உச்சத்துக்கு சென்றது. 1974 இல் இந்தியாவின் முதல் அணு சோதனையும் இந்திரா காந்தியின் தலைமையில் தான் நடைபெற்றது.

ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு அவர் கொண்டு வந்த அவசர நிலை அவரின் புகழுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திராவின் அரசியல் வாழ்வு குறித்து நமது புதுடெல்லி செய்தியாளர் தங்கவேல் வழங்கும் குறிப்பை இங்கே கேட்கலாம்.


அதேவேளை பிரதமர் இந்திரா காந்தி பலரால் பலவிதமாக பார்க்கப்பட்ட - விமர்சிக்கப்பட்ட ஒரு தலைவர். சக்தி மிக்க தலைவராக அவர் வெளி உலகுக்கு இருந்த காலத்தில் கூட உண்மையில் அவர் தனி வாழ்வில் சற்று பாதுகாப்பு உணர்வில்லாத ஒருவராக இருந்ததாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டோவுடன்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டோவுடன்
தனது குடும்பத்தைத் தவிர பிறர் மீது அவர் அதிகம் நம்பிக்கை வைத்ததில்லை என்றும் இந்தியாவில் குடும்ப ஆட்சி தழைத்தோங்க வழிவகுத்தவர் என்றும் அவர் மீது விமர்சனங்கள் உண்டு.

அதே நேரத்தில் அவர் நாடு முழுவதிலும் மதிக்கப்பட்ட தலைவராகவும் விளங்கியுள்ளார். இந்திரா காந்தியின் சகாப்தத்தை இந்தியா எப்படி நினைவு கொள்ளும் என்று சமகால வரலாற்று ஆய்வாளரான ராமச்சந்திர குஹா அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டார் நமது மணிவண்ணன்.


டெல்லி வன்செயலில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் உறவினர்கள்
டெல்லி வன்செயலில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் உறவினர்கள்
இந்திரா காந்தி அவர் கள் அவரது சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது காங்கிரஸ் கட்சிக்காரர்களால் தூண்டப்பட்ட வன்முறையில் பலநூறு சீக்கியர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

அந்த படுகொலைகள் நடந்து 25 ஆண்டுகளான பிறகும் அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்கிற விமர்சனம் பலராலும் முன் வைக்கப்படுகிறது.

இது குறித்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவரும் இந்து பத்திரிகையின் அரசியல் பகுப்பாய்வாளர் சித்தார்த் வரதராஜன் அவர்கள் இது குறித்து பிபிசியிடம் பேசினார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள