|
எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான ஹெச்.ஐ.வி. கிருமியின் தொற்றைத் தடுக்க உதவும் ஓர் தடுப்பு மருந்தின் மீது பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ள
பரிசோதனைகளின் முடிவுகள் ஊக்கம் தருவதாய் அமைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தாய்லாந்தில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்டுள்ள இந்த மருந்துப் பரிசோதனை அமெரிக்க இராணுவத்தின் நிதி
உதவியோடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆறு வருடங்களுக்கு முன் இந்த தடுப்பு மருந்து பரிசோதனை ஆரம்பமானது. எய்ட்ஸை உண்டாக்கும் நோய்க்கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தைக்
கண்டறிவதில் அண்மைய ஆண்டுகளாக ஓர் தேக்கநிலை இருந்து வந்தது.
தன்னார்வலர்களில் ஒரு பகுதியினருக்கு புதிய தடுப்பு மருந்தும் இன்னொரு பகுதியினருக்கு வெற்று ஊசியும் போடப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு வெற்று மருந்து கொடுக்கப்பட்டவர்களை விட முப்பது சதவீதம் கூடுதலாக ஹெச்.ஐ.வி. தொற்று
ஏற்படுவதற்கான ஆபத்து குறைந்துள்ளது.
|