BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 செப்டம்பர், 2009 - பிரசுர நேரம் 17:45 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
மலையக தொழிலாளர் சம்பளப் போராட்டம்
 
கொழுந்துக் கூடை சுமக்கும் பெண்
கொழுந்துக் கூடை சுமக்கும் பெண்
இலங்கையில் மலையக பகுதியில் சம்பள உயர்வு கோரி இரண்டரை லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்திருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதனால் தேயிலை உற்பத்தியும் ஏற்றுமதியும் பாதிக்கப்படக் கூடும் என்று தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கூறியிருக்கிறது.

சீனா, இந்தியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இலங்கை உலகில் நான்காவது மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நாடாகத் திகழ்கிறது.

ஆனால், தொழிலாளர்களின் இந்த ஒத்துழையாமை இயக்கம் அந்த உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

1992 இல் இலங்கையின் பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டன.அதனையடுத்து 1992 முதல் 2002 வரையிலான காலப்பகுதியில் பெருந்தோட்டத்துறையில் வறுமை 22 வீதத்தில் இருந்து 32 வீதமாக அதிகரித்ததாக கூறுகிறார் இலங்கை தொழிலாலர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரான ஆர். யோகராஜன்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியானதைத் தொடர்ந்து அவர்களுடைய சம்பளம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோருகின்றன.

நாளொன்றுக்கு 500 இலங்கை ரூபாய்கள் ஒட்டுமொத்த சம்பளமாக ஒரு தொழிலாளிக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தொழிற்சங்கங்களின் கோரிக்கை. அதற்கு முதலளிமார் சம்மேளனம் இணங்காத காரணத்தினாலேயே தொழிலாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் இறங்கியுள்ளதாக கூறுகிறார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு தலைமை தாங்குகின்ற அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள