19 ஜூன், 2009 - பிரசுர நேரம் 12:03 ஜிஎம்டி
இலங்கையின் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள சிறார்களைத் தேடுவதில் அவரது உறவினர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை விளக்கும் பெட்டகம்
வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி நிலையங்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்கியுள்ளவர்களில் பெற்றோரையும் உற்றோரையும் பிரிந்து வாழும் சிறுவர்களைப் பார்வையிடுவதற்கும், அவர்களைத் தம்மோடு அழைத்துச் செல்வதற்குமாக பல உறவினர்களும் தாய்-தந்தையரும் அலைந்து திரிகிறார்கள்.
பலர் யாழ்ப்பாணத்திலிருந்து இதற்காகவென்றே வவுனியாவுக்கு வந்திருக்கின்றார்கள்.
இவர்கள் பிரயாண சிரமங்களாலும் தங்குமிட வசதி இல்லாமையாலும் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் உள்ளாகிவருகிறார்கள்.
இவர்களது மனச்சுமைகளை இந்தப் பெட்டகத்தி்ல் கேட்கலாம்.