|
"மக்கள் கோருவது போர்நிறுத்தமே"
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் இந்தியாவிடமும், சர்வதேச சமூகத்திடமும் போர்நிறுத்தத்தையே கோருவதாக விடுதலைப்
புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கே போர்பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் ''எமது மக்கள் எங்களோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக இராணுவ தாக்குதல்கள் நடந்த சமயத்தில் மக்கள், விடுதலைப் புலிகளின் இன்ப துன்பங்களில் மட்டுமல்லாது போராட்டத்திலும் பங்குபெற்று வருகிறார்கள். அரசு பொய்யான பிரச்சாரத்தை செய்கிறது. சர்வதேச நிறுவனங்களோ ஒரு தலைப்பட்சமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன'' என்றார் நடேசன். ஐ.நா. மன்ற ஊழியரை விடுதலைப்புலிகள் கட்டாயமாக ஆள்சேர்த்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்டபோது, தமது அமைப்பு யாரையும் கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்பதில்லை என்றும், அதேசமயம் அரச படைகளின் அக்கிரமங்கள் அதிகரிக்கும்போது பொதுமக்களின் சகலதரப்பாரும் தமது இயக்கத்தில் தாமாக முன்வந்து இணைவதாகவும், அப்படி அந்த ஊழியரும் இணைந்திருந்தால் தமது இயக்கம் அவரை இணைத்துக்கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். அவரது விரிவான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||