|
தமிழ் சினிமாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தமிழக சினிமாத்துறை டிஜிட்டல் தொழில் நுட்பத்தை நோக்கி மெதுவாக தனது காலடியை எடுத்து வைத்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக செலுலோயிட் பிலிம் சுருள்களில் இதுவரை படமாக்கப்பட்டு, திரையிடப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்கள் இனிமேல் டிஜிட்டல் கமெராக்கள் மூலம் படமாக்கப்பட்டு கணனிகளின் உதவியுடன் திரையிடப்படும் நிலை உருவாகிவருகிறது. முதன்முதலாக ரஜனிகாந் நடித்த சந்திரமுகி திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு திரையரங்கில் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக திரைப்படங்களை செய்மதி மூலம் திரையிடுவது பற்றியும் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தினால் திரைப்படத்துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை ஆராய்கிறார் எமது தமிழக நிருபர் எல்.ஆர்.ஜெகதீசன். |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||