Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 மார்ச், 2005 - பிரசுர நேரம் 13:32 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது
 
எழுத்தாளர் ஜெயகாந்தன்
எழுத்தாளர் ஜெயகாந்தன்
நவீன தமிழ் இலக்கிய உலகில் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படும் ஜெயகாந்தனுக்கு இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்படுகிறது.

ஐந்து லட்ச ரூபாய் ரொக்கமும், வெண்கலச் சிலையும் பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளாக அளிக்கப்படுகிறது.

ஞானபீட பரிசைப் பெறும் இரண்டாவது தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன்; இதற்குமுன் 1975ல் சித்திரப்பாவை புதினத்திற்காக தமிழ் எழுத்தாளர் அகிலன் இந்தப் பரிசை வாங்கியிருந்தார்.

புதினங்கள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதுவதை ஜெயகாந்தன் நிறுத்தி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவர் காலடித் தடம் பற்றி பல எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பற்றி புதுமைப்பித்தனுக்கு பிறகு அதிக அளவில் தனது படைப்புகளில் பேசியவர் அவர்தான்.

நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கூடம் சென்ற அவர் சுயமாக பலவிஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார், ஆங்கிலத்திலும் புலமை பெற்றார்.
அவரது படைப்புகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் பலர்.

இலக்கியம் அல்லாது திரைப்படங்களிலும் தனி முத்திரை பதித்தவர் அவர். எவ்வித அனுபவமும் இல்லாது அவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படமான 'உன்னைப்போல் ஒருவன்' தேசிய விருதைப் பெற்றது என்பது குறிப்பிதத்தக்கது.

ஞானபீட விருது பெறப்போகும் இத்தருணத்தில் ஜெயகாந்தன் தமிழோசைக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள