bbc.co.uk navigation

மாலியில் சிறார் போராளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது: யுனிசெஃப்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 ஆகஸ்ட், 2012 - 15:12 ஜிஎம்டி
மாலியில் சிறார் போராளிகள்

மாலியின் வடபகுதியில் ஆயுதக் கும்பல்கள் சிறார்களை அதிக எண்ணிக்கையில் சண்டைகளில் பயன்படுத்தி வருகிறார்கள் என ஐநாவின் குழந்தைகள் உதவி அமைப்பான யுனிசெஃப் கூறுகிறது.

12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறார்கள் சுமார் 200 பேர் ஆயுதக் கும்பல்களுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளனர் என்று சென்ற மாதம் யுனிசெஃப் கூறியிருந்தது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துவருவதாக தற்போது அது கூறுகிறது.

15 வயது சிறார்களை சண்டையிடுவதற்காக தமது இயக்கத்தில் சேர்க்க முடியும் என அன்சார் எத்தீன் இஸ்லாமியவாதக் குழு பிபிசியிடம் ஒப்புக்கொண்டுள்ளது.

அதனினும் வயது குறைந்த சிறார்கள் பொருட்களை சுமந்துசெல்வதற்கும், இடங்களை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், பதற்றம் அதிகரிக்கும் வேளையில் இவர்களும் துப்பாக்கி ஏந்த நேரிடலாம் என்றும் யுனிசெஃப் கூறுகிறது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.