
மாலியின் வடபகுதியில் ஆயுதக் கும்பல்கள் சிறார்களை அதிக எண்ணிக்கையில் சண்டைகளில் பயன்படுத்தி வருகிறார்கள் என ஐநாவின் குழந்தைகள் உதவி அமைப்பான யுனிசெஃப் கூறுகிறது.
12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறார்கள் சுமார் 200 பேர் ஆயுதக் கும்பல்களுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளனர் என்று சென்ற மாதம் யுனிசெஃப் கூறியிருந்தது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துவருவதாக தற்போது அது கூறுகிறது.
15 வயது சிறார்களை சண்டையிடுவதற்காக தமது இயக்கத்தில் சேர்க்க முடியும் என அன்சார் எத்தீன் இஸ்லாமியவாதக் குழு பிபிசியிடம் ஒப்புக்கொண்டுள்ளது.
அதனினும் வயது குறைந்த சிறார்கள் பொருட்களை சுமந்துசெல்வதற்கும், இடங்களை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், பதற்றம் அதிகரிக்கும் வேளையில் இவர்களும் துப்பாக்கி ஏந்த நேரிடலாம் என்றும் யுனிசெஃப் கூறுகிறது.







