bbc.co.uk navigation

பாகிஸ்தான் தாக்குதலில் சிறார்கள் உட்பட 9 பேர் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 ஜூலை, 2012 - 15:15 ஜிஎம்டி

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் ஒன்றில், பல சிறார்கள் உட்பட குறைந்தபட்சம் 9 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே குர்ராமில், முன்னாள் தலிபான் தளபதி ஒருவரின் வளாகத்தின் வாசலுக்குள் தற்கொலையாளி வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை செலுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் தலிபான்கள் அமைப்பில் இருந்து பிரிந்து செயற்படும் தளபதியான முல்லா நபி அவர்கள், இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் தலிபான்களே நடத்தியதாகக் கூறியுள்ளார்.

பலோசிஸ்தானில் நடைபெற்ற பிறிதொரு சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தாக்குதலாளிகள் துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் ராக்கட் மூலம் தாக்கியதில் 6 கடலோரக் காவற்படையினர் கொல்லப்பட்டனர்.

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.