-
கடந்த சில ஆண்டுகளில் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் நடக்கும் பாரிய அளவிலான நில கையகப்படுத்தல்கள் பத்திரிகை செய்திகளை ஆக்கிரமித்திருந்தன. ஆப்ரிக்காவில் எத்தியோப்பிய, தெற்கு சுடான், காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் சியாரா லியோன் போன்ற நாடுகள் எல்லாம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பல முக்கிய காணி உடன்படிக்கைகளை செய்துள்ளன.ஆனால் அவை பெருமளவில் மக்களுக்கு பல பாதகங்களை ஏற்படுத்தியுள்ளன.



































