
குண்டு வெடித்த இடம் ஒன்று
இராக்கில் அலையலையாகத் தொடர்ந்த தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 100 பேர் வரை காயமடைந்துள்ளார்கள்.
குண்டுத் தாக்குதல்களும், துப்பாக்கிச் சூடுகளும் பல இடங்களில் நடந்துள்ளன.
இந்த வன்செயல்களில் முக்கிய சியாக்கள் வாழும் பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொலிஸாரும், சோதனைச் சாவடிகளும் தாக்கப்பட்டுள்ளன.

பாக்தாதில் மத்திய கர்ரடா மாவட்டத்தில், அடுத்தடுத்து இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புக்களில் 9 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
தலைநகருக்கு வெளியே பகுபாவில் இருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த தாக்குதல்களுக்கு எந்தக் குழுவும் உரிமை கோரவில்லை. கடந்த டிசம்பரில் அமெரிக்கப் படையினர் வெளியேறியது முதல் இராக்கில் வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன.
மொசூல், கிர்க்குக், சலாஹுதீன் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.








